Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

அந்தச் சிவகாமி மகனிடம் பாடல் வரிகள்

UDHAYA KUMAR October 29, 2022 & 18:45 [IST]
அந்தச் சிவகாமி மகனிடம் பாடல் வரிகள் Representative Image.

அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி?
(அந்தச் சிவகாமி மகனிடம்)

கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண் எனப் பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறன்ன வேலை?
(அந்தச் சிவகாமி மகனிடம்)

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழல் ஆடும் விழியோடும் ஆடினானே!
அன்று நிழலாடும் விழியோடு ஆடினானே
என்றும் கண்ணில் நின்றாடச் சொல்லடி!
(அந்தச் சிவகாமி மகனிடம்)

மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால், நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால், பேதங்கள் தோன்றுமோ?

காலம் மாறினால் காதலும் மாறுமோ?
மாறாது மாறாது இறைவன் ஆணை!
என்றும் மாறாது மாறாது இறைவன் ஆணை!

இந்த‌ச் சிவ‌காமி மகனுடன் சேர்ந்து நில்ல‌டி
இன்னும் சேரும் நாள் பார்ப்ப‌து என்ன‌டி?
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி?
தோகை இல்லாம‌ல் வேல‌ன் ஏத‌டி?

படம்: பட்டினத்தில் பூதம்
குரல்: TMS, பி.சுசீலா
இசை: ஆர். கோவர்த்தனம்
வரி: கண்ணதாசன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்