ஸ்ரீ ராம பக்தராகவும், சனி பகவானின் நண்பனாகவும் இருந்து நம்மைக் காத்து அருள்பவரே ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமான். ஆஞ்சநேயரைப் போற்றி வணங்குபவர்களுக்கு எத்தகைய துன்பமும் நேராது எனக் கூறுவர். சிரஞ்சீவியாக வரம் பெற்ற ஆஞ்சநேயரைப் போற்றி வணங்கிட வருகின்ற துயரமும் நீங்கி, வளமான வாழ்க்கையைத் தருவார். ஆஞ்சநேயப் பெருமானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை நாள்களில், அவரைப் போற்றி வணங்கக் கூடிய 108 போற்றிகளை இந்தப் பதிவில் காணலாம்.
ஓம் ஆஞ்சநேயா வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் பிரசோதயாத்
ஓம் அருளே போற்றி
ஓம் அருளானந்தனே போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் அருட்பெருஞ்ஜோதியே போற்றி
ஓம் ஆகாச சஞ்சாரியே போற்றி
ஓம் அனுமனே போற்றி
ஓம் அஞ்சனைப் புதல்வனே போற்றி
ஓம் ஆதி அந்தம் அல்லானே போற்ரி
ஓம் அந்தாதியே போற்றி
ஓம் ஆக்கு அழிவு அற்றோனே போற்றி
ஓம் அவினாசியே போற்றி
ஓம் அரூபியே போற்றி
ஓம் அசரீரியே போற்றி
ஓம் ஆனந்தனே போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அறலோனே போற்றி
ஓம் அமைதியே போற்றி
ஓம் அடக்கமே போற்றி
ஓம் அமலனே போற்றி
ஓம் அறம்பாவம் அற்றோனே போற்றி
ஓம் அப்பனே போற்றி ஓம் அம்மையே போற்றி
ஓம் அஞ்சினை வென்றவனே போற்றி
ஓம் அஞ்சினைச் செல்வனே போற்றி
ஓம் ஆனந்த ஜோதியே போற்றி
ஓம் ஆதாரமே போற்றி ஓம் அணுவே போற்றி
ஓம் அணுவின் அணுவே போற்றி
ஓம் அணுவின் ஆகர்ஷணமே போற்றி
ஓம் அண்டத்தின் ஆதாரமே போற்றி
ஓம் அண்டத்தின் காவலனே போற்றி
ஓம் ஆகுதியே போற்றி
ஓம் அறிவுக் கனலே போற்றி
ஓம் அருட்புனலே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகனே போற்றி
ஓம் அசங்கும் குண்டலதாரியே போற்றி
ஓம் ஆவினன் அவதாரா போற்றி
ஓம் அஞ்சு வண்ண நாயகா போற்றி
ஓம் ஆதித்தன் சீடனே போற்றி
ஓம் ஆசையிலாச் சீலனே போற்றி
ஓம் அடக்கத்தின் அமைதியே போற்றி
ஓம் அறத்தின் வடிவே போற்றி
ஓம் அமிர்தவாணனே போற்றி
ஓம் அருட்கவிதை சொல்வடிவே போற்றி
ஓம் அறிவுச் சதுரனே போற்றி
ஓம் அங்கத பிரியனே போற்றி
ஓம் அனந்த புச்சனே போற்றி
ஓம் ஆணைப் பணிவோனே போற்றி
ஓம் ஆற்றலின் உறைவிடமே போற்றி
ஓம் அமர ஜாம்பவான் ப்ரியனே போற்றி
ஓம் அச்சமற்ற வீரனே போற்றி
ஓம் அலைகடல் கடந்தோனே போற்றி
ஓம் ஆற்றலின் பேருருவே போற்றி
ஓம் அரியின் சேவகனே போற்றி
ஓம் அப்பொன்மலை வந்தித்த அருட்செல்வா போற்றி
ஓம் ஆசானே போற்றி
ஓம் அரக்கிவாய் அணுவாக போற்றி
ஓம் நுழைந்தோனே போற்றி
ஓம் அற்புதம் செய் விந்தனே போற்றி
ஓம் அந்நிழலரக்கியை மாய்த்தோனே போற்றி
ஓம் அருந்தவசிகள் வாழ்த்தப் பெற்றோனே போற்றி
ஓம் அரக்கி இலங்கிணியை ஒடுக்கியவா போற்றி
ஓம் அஞ்சா நெஞ்சனே போற்றி
ஓம் அட்டமா சித்திக்கு அதிபதியே போற்றி
ஓம் அன்னையிடம் மோதிரம் அளித்த அன்பனே
ஓம் அன்னை சோகம் களைந்தோனே போற்றி
ஓம் அளவிலா வடிவம் கொண்டோனே போற்றி
ஓம் அசோகவனம் அழித்தோனே போற்றி
ஓம் அசுரன் நமனே போற்றி
ஓம் அக்சனை வதைத்தவா போற்றி
ஓம் அயனாயுதத்திற்குக் கட்டுண்டவா போற்றி
ஓம் அரக்கர்கோ ஆணவம் அடக்கியவா போற்றி
ஓம் அத்தீவிற்குத் தீயிட்டவா போற்றி
ஓம் அளப்பரியா ஆற்றலே போற்றி
ஓம் ஆழி தாவிய தூதனே போற்றி
ஓம் அண்ணலிடம் சூடாமணி ஒப்பித்தவா போற்றி
ஓம் அல்லல் தீர்க்கும் அன்பனே போற்றி
ஓம் அளவற்ற அன்பே போற்றி
ஒம் ஆராதனைத் தெய்வமே போற்றி
ஓம் அமரவ வாழ்வு பெற்றோனே போற்றி
ஓம் அயனாகும் அரசே போற்றி
ஓம் அபயம் அருள்வோனே போற்றி
ஓம் அல்லல் களைவோனே போற்றி
ஓம் அரும் பொருளே போற்றி
ஓம் அயோத்தி நிவாஸனே போற்றி
ஓம் ஆபத் பாந்தவனே போற்றி
ஓம் அனாத இரட்சகனே போற்றி
ஓம் அபார கருணாமூர்த்தியே போற்றி
ஓம் அபய வரதனே போற்றி
ஓம் அருட்குடையே போற்றி
ஓம் அணுகுவோர் துயர்துடைப்போனே போற்றி
ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி
ஓம் ஆயிரம் நாமம் கொண்டோனே போற்றி
ஓம் அன்பர்க்கு அருள்வோனே போற்றி
ஓம் அஞ்சு முகத்தோனே போற்றி
ஓம் அற்புதம் நின்ற கவியே போற்றி
ஓம் ஆராதனையின் ஆணிவேரே போற்றி
ஓம் அமரனே போற்றி
ஓம் அமுத நிலை அருள்வோனே போற்றி
ஓம் அருளும் திருவடியே போற்றி
ஓம் அரியின் வாகனமானவனே போற்றி
ஓம் அரியின் அடியோனே போற்றி
ஓம் அஞ்சலி அந்தணனே போற்றி
ஓம் ஆன்மாவின் உட்பொருளே போற்றி
ஓம் அகமெலாம் நிறைந்திருக்கும் அமுதே போற்றி
ஓம் அமுதாகி இனிக்கும் அற்புதமே போற்றி
ஓம் அனுபூதியே போற்றி
ஓம் அருளும் தெய்வமே அனுமனே போற்றி
ஓம் அண்ணலின் அரியணை போற்றி
ஓம் அமர்ந்தோனே ஆஞ்சநேயனே போற்றி போற்றி….!
சனிக்கிழமை தோறும், ஆஞ்சநேயப் பெருமானை வேண்டி, ஆஞ்சநேயர் போற்றிகளை உச்சரித்து வருவதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…