திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்பட உள்ளது. அதன்படி இன்று அதிகாலை 4 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கு அந்த தீபம் காட்டப்பட்டது. அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக காட்டப்பட்டது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட உள்ளது. இதற்காக மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று மாலையில் மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபம் ஏற்றப்படும் போது என்னென்ன மாதிரியான நடைமுறைகள் பயன்படுத்தப்படுகிறது என அறிந்து கொள்ளலாம் வாங்க...
அண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வெகு சிறப்பாக நடைபெறும். பஞ்ச மூர்த்திகளான விநாயகப்பெருமான், வள்ளி, தேவானையுடன் முருகன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கிளி கோபுரத்திற்கு அருகேயுள்ள அலங்கார மண்டபத்தை அடைவார்கள்.
அதன் பின்னர் மகா தீபம் ஏற்ற சரியாக 2 நிமிடங்களுக்கு முன்னால் அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு வருவார். வந்ததும் கண் இமைக்கும் நேரத்திற்குள் அற்புதம் நடனம் ஒன்றினை அரங்கேற்றிவிட்டு உள்ளே சென்றுவிடுவார். இதனை பக்தர்கள் காண்பது கோடி புண்ணியமாகும்.
அந்த நேரத்தில் கோயிலில் அகண்ட தீபமானது ஏற்றப்படும். அதனை சமிஞ்சையாக கொண்டு பருவதராஜ ராஜகுலத்தினர் மலைமேல் மகா தீபத்தை ஏற்றுவார்கள்.
சரியாக 6 மணிக்கு ஏற்றப்படும் போது திருவண்ணாமலை திருத்தலமே பிரகாசமடையும், அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றுவார்கள். வான வேடிக்கைகள் நடக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…