நாம் பகலில் உழைக்கும்போது பெரும்பாலும் நம் லட்சியத்தை நெருங்க முயற்சி செய்வதில் மற்ற சிந்தனைகள் வராது, ஆனால் இரவில் நாம் உறங்கும்போது நம் லட்சியம் நமக்கு கனவாக வந்து தூங்க விடாமல் செய்வது நமக்கு புரியும். ஆனால் ஒரு சில சமயம் நம் கனவில் என்ன பார்க்கிறோம் என்பது நமக்கு புரியாமல் போகும்.
உங்களுக்கு இந்த மாதிரியான நிகழு நடந்து நாம் கனவில் பார்த்தற்கு என்ன அர்த்தம் என சிந்தித்தது உண்டா..? உங்கள் சந்தேகத்தின் விடை அளிக்க கோவில் சார்ந்த கனவு வந்தால் என்ன பலன் என்பதை காணலாம்.
PART 1: நம்ம கனவில் மாடு, எருமை வந்தால் இது நடக்குமா….
கோவில்
நாம் தூங்கும்போது கனவில் கோவில் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் கூடிய சீக்கிரம் நடக்கும் என்பதாகும். ஒருவேளை கனவில் நாம் கோவில் செல்ல முடியாமல் கூட்டத்தில் சிக்கி கொண்டால் நமக்கு எதிர்பாராத இன்னல்கள் நடைபெறும் அல்லது முன்னேற்றத்தில் தடை ஏற்படும்.
நாம் ஆலயத்தின் தலைவாசலைத் திறப்பது போல கனவு வந்தால் செய்யப்படும் முயற்சி வெற்றி பெறும். கோவில் கோபுரத்தை கனவில் வந்தால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். கோவில் தெப்பத்தைக் கனவில் கண்டால் நமக்கு கவலை ஏற்படவுள்ளது.
நம் கோவில் இருக்கும் இறைவனுக்கு மாலை போடுவது போல் கனவு வந்தால் வளர்ச்சி உண்டாகும் என்பது அர்த்தமாகும். ஒருவேளை இறைவனையே கனவில் வந்தால் பிரச்சனை விலகும். நாம் இறைவனுடன் பேசுவது போல கனவு வந்தால் நல்லதாகும், நமக்கு எதிர்பாராத நேரத்தில் வீடு தேடி நன்மை வரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…