செல்வம் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் நினைவில் வருவது குபேரர். இருப்பினும், குபேரரும் ஒரு சாதாரணமானவரே ஆவார். ஆனால், இவரை செல்வந்தராக்கியவர்களைப் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். குபேரன், தனது நண்பராகிய சிவபெருமானிடம் செல்வத்தைக் குறித்து கேட்கிறார். இதற்கு சிவபெருமான் கூறியதாவது, செல்வத்தை ஆளக்கூடியவராய் லட்சுமி தேவி இருக்கிறார்.
உனக்கு செல்வத்தை ஆளும் தகுதி வேண்டுமானால், உனக்கு மகாலட்சுமியின் அருள் வேண்டும் எனக் கூறுகிறார். மகாலட்சுமியை வேண்டுவதற்கு சிவபெருமான் கூறியதாவது, ஐப்பசி மாத அமாவாசை வரும் போது, அதாவது தீபாவளி தினத்தன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை வேண்டி அருளும் போது செல்வ செழிப்புடன் இருப்பாய் எனக் கூறினார்.
இவ்வாறே, செல்வங்களுக்கு எல்லாம் தலைவனாய் தீபாவளி தினத்தன்று லட்சுமி குபேர பூஜையை மேற்கொண்டு குபேர பகவான் தோன்றினார். இந்த குபேர பூஜையை லட்சுமி தாயாருடன் சேர்ந்து வழிபடுவதே சிறந்தது. தீபாவளி தினத்தன்று மாலை அமாவாசை நேரத்தில் குபேரன் எவ்வாறு லட்சுமி தேவியை வழிபட்டு செல்வத்திற்கு அதிபதியானாரோ, அது போலவே நாமும் அமாவாசை திதியில் வழிபட்டு செல்வத்தைப் பெற முடியும். இந்தப் பதிவில், லட்சுமி குபேர பூஜை செய்யும் முறைகளைப் பற்றி காண்போம்.
மகாலட்சுமி திருவுருவப்படம்
குபேரர் படம் அல்லது விக்ரஹம்
இரண்டு குத்துவிளக்கு
கலசம் வைத்து வழிபடுபவர்களாக இருந்தால், ஒரு கலசம் வைத்து வழிபடலாம்
குறிப்பு: கலசம் கட்டாயம் வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. கலசம் வைப்பவர்கள் எவர்சில்வரைத் தவிர்த்து, மற்ற எந்த பாத்திரங்களை வேணாலும் கலசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். கலசத்தில் நீர் ஊற்றி, பன்னீரைத் தெளித்து வாசனைத் திரவியத்தைப் போட்டுக் கொள்ளலாம். மேலும், அதில் எலுமிச்சைப்பழம், மஞ்சள் பொடி போட்டு, கலசத்தின் மேல் மாவிலையுடன் கூடிய தேங்காயை வைத்து மூடி விட வேண்டும்.
மகாலட்சுமிக்கு உகந்த துளசி, தாமரை கண்டிப்பாக பூஜையில் இடம்பெற வேண்டும் (ஒரு தாமரையாவது கட்டாயம் இருக்க வேண்டும்).
இத்துடன், குபேர எந்திரம் ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். இதனை நாம் தயாராக வைத்திருக்க வேண்டும். இன்னும் ஒரு சிலர், குபேர எந்திரத்தை வைத்திருப்பர். அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து, பூஜைக்குத் தேவையான நெய்தீபம் ஏற்றி, நைவேத்தியங்கள் செய்து வழிபடலாம்.
நைவேத்தியமாக, பால் பாயாசம், கற்கண்டு சாதம், இனிப்பு கலந்த அவல் செய்து வைக்கலாம்.
வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு முதலியவற்றை பூஜைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், பூஜைக்கு நல்ல வாசனையான குங்குமம் எடுத்துக் கொண்டு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.
நாணயத்தால் பூஜை செய்ய வேண்டும். இதற்காக, 9 நாணயங்களை ஒரே மாதிரியாக எடுத்துக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
குபேரனுக்கு குபேரனின் மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது, ஒரு தாமரை இதழ் மேல் ஒரு நாணயம், சிறிது குங்குமம் எடுத்துக் கொண்டு கீழே கொடுக்கப்பட்ட மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும்.
“ஓம் குபேராய நமஹ
ஓம் கணபதயே நமஹ”
இந்த இதழ்களை மகாலட்சுமி, குபேரரின் பாதத்தில் வைக்க வேண்டும்.
இவ்வாறு நைவேத்தியங்கள் வைத்து, முறையாக வழிபட்டு நைவேத்தியங்களை வழங்கலாம்.
இந்த ஒன்பது நாணயங்களை, நீங்கள் புலங்கக் கூடிய பணப் பை அல்லது பணப் பெட்டியில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
இந்த தினத்தில் சிறப்பான முறையில் முறையாக லட்சுமி குபேர பூஜையை வழிபட்டால், செல்வ செழிப்புடன் இருப்போம் என்பது ஐதீகம்.
வரக்கூடிய தீபாவளி தினத்தன்று மாலை நேரத்தில் அமாவாசை கூடி வருவதால், வழிபடுவதற்கான நேரமும் சரியாக உள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் கலந்து கொண்டு இந்த பூஜை செய்து வழிபட்டால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…