Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

வேண்டும் வரத்தை அருளும் மணக்குள விநாயகரைப் பற்றி நீங்கள் அறியாத சிறப்பு! | Manakula Vinayagar Temple

Gowthami Subramani October 12, 2022 & 07:30 [IST]
வேண்டும் வரத்தை அருளும் மணக்குள விநாயகரைப் பற்றி நீங்கள் அறியாத சிறப்பு! | Manakula Vinayagar TempleRepresentative Image.

முழு முதற் கடவுளாய் நம்மைக் காக்கும் விநாயகப் பெருமானைப் போற்றி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அதற்கு ஈடாகாது. விநாயகப் பெருமானின் சிறப்பு வாய்ந்த தலங்கள் தமிழகத்தில் ஏராளம் காணப்படுகின்றன. அந்த வகையில் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகச் சிறப்பு வாய்ந்த தலமாகும். புதுச்சேரியின் வரலாறு துவங்கும் காலம் முதலே, இந்த திருத்தலத்தின் வரலாறும் தொடர்கிறது. இந்த தலத்தின் மாறுபட்ட சிறப்பம்சங்களைப் பற்றி காண்போம்.

வேண்டும் வரத்தை அருளும் மணக்குள விநாயகரைப் பற்றி நீங்கள் அறியாத சிறப்பு! | Manakula Vinayagar TempleRepresentative Image

மணக்குள விநாயகர் வரலாறு

குறைந்தது 500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டு விளங்கும் மணக்குள விநாயகரைப் பற்றி இதில் பார்க்கலாம். கடந்த 1688 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற சமயத்தில் பிரெஞ்சு மக்கள் கோவிலுக்கு அருகில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில், கோட்டையில் தாக்கத்தை ஏற்படுத்த, அருகில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற நினைத்தனர். இவ்வாறு அவர்கள், விநாயகர் சிலையை கடலில் வீசத் தொடங்கினர். ஆனால், ஒவ்வொரு முறை அவர்கள் செய்யும் போதும், சிலை மீண்டும் தானே தோன்றும். இதனைக் கண்ட பிரெஞ்சு மக்கள், அந்த முயற்சியைக் கைவிட்டு, இறைவனின் பக்தர்களாக மாறினர்.

இத்தலத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு. ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன், அகன்ற நெற்றியையும், ஒளிரும் கண்களும் கொண்ட துறவி ஒருவர், விடுதலையின் மூலம் தெய்வீக தலத்தில் சமாதி அடைந்தார். அந்த சமயத்தில் இருந்து, இந்த திருத்தலம் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு புனித இடமாகக் கருதப்படுகிறது.

வேண்டும் வரத்தை அருளும் மணக்குள விநாயகரைப் பற்றி நீங்கள் அறியாத சிறப்பு! | Manakula Vinayagar TempleRepresentative Image

மணக்குள விநாயகர் கோவில் கட்டிடக்கலை

பாரம்பரியமாகப் போற்றும் வகையில் அமையும் இந்த திருத்தலம் பல்வேறு சிறப்பான சிலைகளால் அலங்கரிக்கப்பட்டதாகும்.

இந்த கோவிலின் முக்கிய சிறப்பம்சமாக அமைவது 18 அடி உயரம் கொண்ட கொடி கம்பம் ஆகும். இது தங்கத்தால் லேமினேட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு சிறப்பம்சம் தங்க ரதத்தில் வீற்றிருக்கும் விநாயகர் சிலை ஆகும். விநாயகரை வலம் கொண்டு செல்லப் பயன்படும் தங்கத் தேர், தேக்கு மரத்தாலும், தங்க ரேக்குகளாலும் ஆனது. இந்த தேர் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட தங்கத்தின் அளவு மொத்தம் 7.5 கிலோவாகவும், இதன் விலை சுமார் 75 லட்சமும் ஆகும்.

இந்த திருத்தலத்தின் மேலும் மண்டபம், பிரகாரம், தெய்வங்களின் சிலைகள் இருக்கும் ராஜகோபுரங்கள் போன்றவை உள்ளன.

வேண்டும் வரத்தை அருளும் மணக்குள விநாயகரைப் பற்றி நீங்கள் அறியாத சிறப்பு! | Manakula Vinayagar TempleRepresentative Image

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் நடைதிறக்கும் நேரம்

மிகச் சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலம் காலை 4.45 மணி முதல் 12.30 மணி வரை திறந்திருக்கும். மேலும், மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை தரிசனம் செய்யலாம்.

வேண்டும் வரத்தை அருளும் மணக்குள விநாயகரைப் பற்றி நீங்கள் அறியாத சிறப்பு! | Manakula Vinayagar TempleRepresentative Image

மணக்குள விநாயகர் கோவில் சிறப்புகள்

இந்த திருத்தலத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 30-க்கும் அதிகமான சித்தர்களில் தொல்லைக்காது எனும் சித்தர், இத்திருத்தால் ஈர்க்கப்பட்டு விநாயகர் சன்னதிக்கு தினமும் சென்று வணங்கி வந்தார்.

இவர் வேண்டுகோளை ஏற்று, சித்தர் இறந்த பிறகு இந்த திருத்தலத்திற்கு பக்கத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும், சித்தர் யாரது கண்ணிற்கும் தென்படாமல் விநாயகரை தரிசிப்பதாகக் கூறப்படுகிறது.

வேண்டும் வரத்தை அருளும் மணக்குள விநாயகரைப் பற்றி நீங்கள் அறியாத சிறப்பு! | Manakula Vinayagar TempleRepresentative Image

நட்சத்திரங்களின் சங்கமம்

இந்த திருத்தலத்தைச் சுற்றி உள்ள சுவர்களில், பல விதமான காண்போரை கவரும் வண்ணத்தில் ஓவியங்கள் இருக்கின்றனர். இங்கு பல விதமான விநாயகரின் சுதை ஓவியங்களும், 27 நட்சத்திர அதிபதிகளின் ஓவியங்களும் காணப்படுவது வியப்பளிக்கிறது.

வேண்டும் வரத்தை அருளும் மணக்குள விநாயகரைப் பற்றி நீங்கள் அறியாத சிறப்பு! | Manakula Vinayagar TempleRepresentative Image

கிணற்றின் மீது அமர்ந்துள்ள விநாயகர்

இந்த மணக்குளத்து விநாயகர் தலத்தில் மூலவர் அமர்ந்திருக்கும் இடம் நீர் நிலைகள் அமர்ந்துள்ள இடமாகும். அதாவது கிணற்றின் மீது மூலவர் அமர்ந்திருப்பார். மூலவருக்கு அருகில் சிறிய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாக இருக்கும். இந்த ஆழத்தை இதுவரை எவராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் நீர் எப்போதும் வற்றாது எனவும் கூறப்படுகிறது.

வேண்டும் வரத்தை அருளும் மணக்குள விநாயகரைப் பற்றி நீங்கள் அறியாத சிறப்பு! | Manakula Vinayagar TempleRepresentative Image

மணக்குள விநாயகர் வழிபாடுகள்

குழந்தை வரம், திருமண வரம் உள்ளிட்ட வழிபாடுகள் இங்கே நடத்தப்படுகிறது. மேலும், வாகன வழிபாடு, புதிதாக தொழில் தொடங்கியவர்கள் இத்திருத்தலத்தை தரிசனம் செய்து வணங்கினால் நல்ல நிலைமையில் இருக்கும் எனக் கூறுவர். இத்திருத்தலத்திற்கு, வெளிநாட்டு கிறிஸ்துவ, முஸ்லீம் பயணிகள் அதிகம் வருவர் எனவும் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்