தனக்கு பிறந்த குழந்தையாக இருக்க வாய்ப்பில்லை என்று சூரிய தேவர் சனி பகவானை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். எனவே, தேவி சாயாவிடம் இந்த குழந்தையை என்னுடைய ஒளி படாத இடத்திற்கு கொண்டு சென்று வளர்த்துக்கொள்ள அனுமதிக்கிறார். சாயா தேவியும் அதே போல செய்கிறார். ஆனால் ஒரு நிபந்தனை எப்போது அந்த குழந்தை என்னுடைய சூரிய கதிர்வீச்சில் படுகிறானோ அப்போது அவன் சாம்பலாகிவிடுவான் என்று எச்சரிக்கிறார் சூரிய தேவன். அதனால் தன்னுடைய குழந்தை வளர்ந்து பெரியவன் ஆகும் வரை சூரிய ஒளியில் படாமல் சனி தேவனை தனி ஆளாக வளர்க்கிறார் சாயா தேவி.
விவரம் தெரியும் அளவிற்கு பெரியவராக வளர்ந்து விடுகிறார் சனீஸ்வரர். அவர் எங்க தவறு நடக்கிறதோ அங்கு அதனை தடுத்து, தவறு செய்பவர்களை நல்வழி படுத்த ஆரம்பிக்கிறார். அப்போது தான் திடீரென அலறல் குரல் கேட்டு செல்கிறார். அங்கு அரக்கன் ஒரு சிறு பிராணியை துன்புறுத்துவதை பார்க்கிறார். அந்த அசுரனிடம் இருந்து அந்த பிராணியை காப்பாற்றுகிறார் சனி தேவன். அது ஒரு காகம். பின்பு சனி தேவரின் மகிமையால் அந்த காகத்திற்கு ஒரு விதமான உணர்வு ஏற்படுகிறது.
அந்த சமயத்தில் சூரிய உதயமாகும் தருணம் என்பதால் சனி பகவான் வேகமாக தன்னுடைய இடத்திற்கு செல்கிறார். அத்தருணத்தில் ஒரு பள்ளத்தில் குதிக்கும் போது அவர் காப்பாற்றிய காகத்தின் மீது சவாரி செய்து தப்பிப்பது விடுகிறார். அப்போது முதல் அந்த காகம் அவரை விட்டு செல்லவில்லை. இதனால் அக்காகம் சனி தேவரின் வாகனமாக மாறியது. இருப்பினும் புராணங்களின் படி, சனீஸ்வரருக்கு காகத்தை தாண்டி நிரைய விலங்குகள் வாகனமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சனி தேவர் இப்படி தன்னுடைய இடத்தில் இருந்து வெளியில் செல்லும் போது சூரிய கதிர்களில் பட்டு காயம் ஏற்படுகிறது. இவருக்கு வலி ஏற்படுகிறது. சனி தன்னுடைய கதிர்களில் வந்ததை தெரிந்துக்கொண்ட சூரிய தேவனுக்கோ கோவம் வருகிறது. மிகுந்த குழப்பத்தில் இருக்கும் சனி பகவான் தன்னுடைய தாயாரிடம் இதைப் பற்றி கேள்வி எழுப்பிகிறார். ஆனால் அவரோ எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கான காரணம் என்ன என்று சனி பகவான் தெரிந்து கொள்வாரா? தன்னுடைய தந்தை யார் என்ற உண்மை அறிந்துகொள்வாரா? பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…