Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Arthashtama Sani Pariharam in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Arthashtama Sani Pariharam in TamilRepresentative Image.

நவக்கிரகங்களில் நீதிகாரகனாக விளங்கும் சனிபகவான், ஒருவரது ஜாதகத்தில் 1 முதல் 12 கட்டங்களில் பயணம் செய்வார். அவ்வாறு சனிபகவான் பயணிக்கும் ஒவ்வொரு கட்டங்களுக்கும் ஒவ்வொரு பெயரால் அழைக்கப்படும். அப்படி பயணம் செய்யும்போது, ஒவ்வொரு நிலையிலும் பல நன்மைகளையும், சில இன்னல்களையும் கொடுப்பார். அந்தவகையில், அர்த்தாஷ்டம சனி காலத்தில் சனி பகவான் எந்தமாதிரியான பலன்களை கொடுப்பார், அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Arthashtama Sani Pariharam in TamilRepresentative Image

அர்த்தாஷ்டம சனி என்றால் என்ன?

சனிபகவான் ஒரு இராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் நிலையை தான் அர்த்தாஷ்டம சனி என்பார்கள். அர்த்தாஷ்டம சனி காலத்தில் கிரகங்களின் பார்வை, லக்ன சுபர் மற்றும் அசுபர் என்ற நிலைக்கு ஏற்ப பலன்களை தருவார். பொதுவாக, அர்த்தாஷ்டம சனியில் பொருள் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். 

அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Arthashtama Sani Pariharam in TamilRepresentative Image

அர்த்தாஷ்டம சனியின் தாக்கம்:

அர்த்தாஷ்டம சனி நடக்கும் ராசியினருக்கு அல்லது அவரது குடும்பத்தில் யாரோவொருக்கு திடீர் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். அதனால், சம்பாத்தியம் அனைத்தும் செலவிலேயே முடிந்துவிடும். சில சமயம் கடன் வாங்கும் அளவிற்கும் செல்லலாம்.

தேவையற்ற வம்புக்கு சென்று, வாய் வார்த்தைகளை விட்டு, அதில் மாட்டிக் கொள்ளும் நிலையையும் அர்த்தாஷ்டம சனி ஏற்படுத்தும். இதனால், தன்னுடைய நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய நிலை ஏற்படும். எனவே, மற்றவர்களின் விஷயங்களிலிருந்து தள்ளி நிற்பது நல்லது.

வாய்ப்புகள், புதிய தொழில் முயற்சி, வியாபாரத்தில் லாபம் என அனைத்தும் நன்றாக நடந்தாலும், செலவுகளுக்கே சரியாக இருக்கும். அல்லது உறவினர்கள், நண்பர்கள் வழியில் சில வருத்தமான நிகழ்வுகள் ஏற்படலாம். சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்தில் சென்று குடியேற வேண்டி வரும். 

கவனச் சிதறல் ஏற்படுத்தும். அதாவது வாகன பயணத்தின்போது விபத்து ஏற்படுதல், அதனால் உடல் சுகவீனம் அடைதல் போன்றவை நடக்க வாய்ப்புள்ளது. நன்றாக படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் மந்தநிலையால், சுமாராக தான் படிப்பார்கள். 

அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட எளிய பரிகாரங்கள் | Arthashtama Sani Pariharam in TamilRepresentative Image

அர்த்தாஷ்டம சனி பரிகாரம்:

சனிக்கிழமைதோறும் சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவதும், அனுமனை வழிபடுவதும் உங்களுக்கு சனி பகவானால் ஏற்படக்கூடிய அசுபலன்கள் நீங்கி நன்மை உண்டாகும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் அர்த்தாஷ்டம சனி காலத்தில் உங்களின் நம்பிக்கையும், முயற்சியும் அதிகரிக்கும்.

சனிக்கிழமை தோறும் நவகிரகங்களில் இருக்கக்கூடிய சனி பகவானுக்கு தீபங்கள் ஏற்றி, எள் சாதம் செய்து நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்யவும். வழிபாடு முடிந்தபிறகு, அந்த சாதத்தை யாசகர்களுக்கு உண்ணக்கொடுத்து விடலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்