நவகிரகங்களில் புதன் புத்தி கூர்மைக்கு உரிய கிரகமாகும். பொதுவாக மனிதனுக்குத் தேவையான செல்வம் புத்தி கூர்மை ஆகும். ஒரு சாதகத்தில் புதன் சாதகமான இடத்தில் சரியான பலத்தில் இல்லை என்றால் அவன் வாழ்நாள் உழுவதும் ஒருவித மந்தன்மையில் தான் இருப்பான். எப்படி புதன் நீசமாவதால் நமக்கு புதன் பகவானின் அருள் கிடைப்பதில் தடை ஏற்படும். உங்கள் ஜாதகத்தில் புதன் நீசம் ஆகியுள்ளதா..? அப்போது இந்த பரிகாரத்தைக் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும்.
நம் வாழ்வில் செல்வம், புகழ் எது வந்தாலும் அதை கட்டி காக்கும் திறனைக் கொடுப்பது புதன் ஆகும். புதன் ஆட்சி, நட்பு, உச்சம் பெற்றிருக்கும்போது அறிவுக்கூர்மை சிறப்பாக இருக்கும். 12 வீட்டில் குரு பகவானின் வீடான மீன ராசியில் புதன் நீச்சம் அடைவார்.
இவ்வாறு புதன் அடைவதால் நமக்கு 20 சதவீத பலன்களைக் கூட கொடுப்பதில் சிக்கலாக அமையும். பொதுவாக புதன் பகவானுக்கு பகை வீடு, கிரகம் என்பது எதுவும் இல்லை, புதன் ஒரு சமநிலை கிரகமாகும். புதன் சந்திரனை எதிரியாக பாவித்தாலும் சந்திரன் புதனை எதிரியாக பாவிக்காது. ஆனால் புதன் நீசம் பெறுவதால் கிடைக்கும் பலனில் சற்று தொய்வு உண்டாகும். நீச்சமான புதன் நீசபங்கம் பெற்றால் நல்ல பலன் உண்டு. ஒருவேளை உங்களுக்கு புதன் நிச்சம் பெற்றால் என்ன செய்வது எனக் குழப்பமா... கீழ்வரும் பரிகாரத்தை செய்வதால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
பொதுவாக புதன் நீச்சமானவர்களுக்கு சருமம் சார்ந்த நோய்கள் அதிகமாக ஏற்படலாம். மேலும், அறிவுக்கு உரியவன் நீச்சமாவதால் சிந்தனை திறன் குறையும். இதனால் எந்த தொழில் செய்தாலும் சீரான முடிவெடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.
பரிகாரம் 1
ஜாதகத்தில் புதன் நீசம் பெற்றவர், ஒரு வெள்ளை துணியில் சில பச்சைபயிறுகளை வைத்து கட்டி பூஜை அறையில் வைக்கவும். அதனுடன் படிக்கும் புத்தகம், எழுதுகோல் தினமும் காலையில் குளித்த பின் இந்த பச்சைபயிறை வலது உள்ளங்கையில் வைத்து புதன் பகவானை வணங்க வேண்டும்.
அதன் பின், திருமால் வழிபாடு செய்து வழக்கமான வேலையை தொடங்க வேண்டும். இவ்வாறு ஒரு மண்டலத்திற்கு (48 நாட்கள்) செய்தால் புதன் தோஷம் குறைந்து நன்மைகள் நடக்கும். பின்னர் 48 நாட்களுக்கு பிறகு இந்த புத்தகம், எழுதுகோல் போன்றவை தானம் அளிப்பதால் வேண்டும்.
பரிகாரம் 2
ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில் சென்று, பெருமாளுக்கு வெள்ளை வஸ்திரம் வைத்து வழிபட வேண்டும். அந்த வஸ்திரத்தை தானமாக 48 வாரங்கள் தொடர்ந்து கொடுப்பது புதன் தோஷத்தை குறைக்கும். ஏனென்றால் மகாவிஷ்ணு புதன் அம்சம் கொண்டவர் ஆவார், இவ்வாறு செய்தால் புதனின் அருள் கிடைக்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…