நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு நம்முடைய ராசியில் நவகிரகங்களின் நிலை மாற்றம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. அதிலும் சனி பகவானின் சின்ன மாற்றம் மொத்த 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் சனி பகவான் தான் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாகும். அப்படி இருக்கையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஜனவரி 17, 2023 அன்று சனி பகவான் மகர ராசியில் இருந்து விலகி தன்னுடைய ராசியான கும்பத்தில் பெயர்ச்சியாக உள்ளது.
இந்த சனி பெயர்ச்சியானது சில ராசிகளுக்கு நன்மையையும், சில ராசிகளுக்கு தீமையையும் தர உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த மூன்று ராசிகளுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த உள்ளார் சனி பகவான். அவை மீனம், கடகம், விருச்சகம். இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு முதல் கட்டம் ஏழரை சனி நடக்க உள்ளது. கடகம் மற்றும் விருச்சகம் ராசிக்காரர்களுக்கு சனி திசை ஆரம்பித்து அடுத்து இரண்டு ஆண்டுகள் வரை இருக்கும். இவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்க உள்ளது மற்றும் பரிகாரம் குறித்த தகவலை இந்த பதிவில் பாப்போம்.
மீனம் ராசிக்காரர்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம். அதனால் சோர்வுற்று நிறுத்திவிடாதீர்கள். உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலன் கூடிய விரைவில் உங்களை வந்து சேறும். குழந்தைகளிடம் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பாட்டால் அவர்களுடன் மனம் விட்டு பேசி அதனை சரி செய்துகொள்ளுங்கள். உங்களுக்கு வரும் வருமானம் குறைவு ஆனால் செலவு அதிகமாக இருக்கும். எனவே, முடிந்த வரை செலவை குறைப்பது புத்திசாலித்தனமான முடிவாகும்.
இயல்பாகவே சற்று பலவீனமாக இருக்கும் விருச்சக ராசிக்காரர்களுக்கு கூடுதல் கோளாறுகள் ஏற்படலாம். எனவே, உணவில் கவனம் அவசியம். உடல் நிலையை சீராக வைத்துக்கொள்ள ஏதாவது செய்யுங்கள். அஜீரணம் சம்மந்தமான பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் முக்கியம். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்திருக்காது. பொருளாதார நெருக்கடி ஏற்படலாம், பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். பணத்தை செலவு செய்வதில் கூடுதல் கவனம் வேண்டும்.
இந்த ராசிக்காரர்களுக்கு உடல், மனம், பொருளாதாரம் என்று அனைத்து ரீதியாகவும் பிரச்சனைகள் வரலாம். மேலும் வார்த்தைகளில் கவனம் அவசியம். கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. தேவையில்லாத இடங்களில் பேசுவதை அறவே தவிர்த்து விடுங்கள். எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொறுமை காத்து எந்த ஒரு விஷயங்களையும் செய்வது நல்லது.
சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் மிகவும் நல்லது. சனிக்கிழமையில் காலையில் குளித்து சனி பகவானை வேண்டி வணங்க வேண்டும். அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் கொடுக்கலாம். இது சனி தோஷத்தில் இருந்து விடுபட உதவியாக இருக்கும்.
சனி பகவானுக்கு பிடித்த எண்ணெய், கருப்பு உளுந்து, கருப்பு ஆடைகள், இரும்பு, கருப்பு போர்வை ஆகியவற்றை தானம் செய்யலாம். அல்லது கோவிலுக்குச் சென்று சனி பகவானின் அருகில் வைத்து விடலாம்.
சனிக்கிழமை சூரிய அஸ்தமனம் சமயத்தில், அரசு மரத்தில் தீபம் ஏற்றி சனி பகவானின் மந்திரத்தை 21 முறை சொல்லி உச்சரிக்கவும். பின்பு மரத்தை சுற்றி வந்து சனி பகவானின் ஆசியை பெற்றுக்கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…