Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பாடாய் படுத்தும் ஏழரை நாட்டு சனி! தப்பிக்க வேண்டிய செய்ய வேண்டியவை..! | Ezharai Nattu Sani Pariharam

Gowthami Subramani Updated:
பாடாய் படுத்தும் ஏழரை நாட்டு சனி! தப்பிக்க வேண்டிய செய்ய வேண்டியவை..! | Ezharai Nattu Sani PariharamRepresentative Image.

சனி பகவானின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு மிகவும் சிரமப் படுகிறவர்களா நீங்கள்? உங்களது வாழ்க்கையில் உள்ள துயரங்களை நீக்குவதற்கு, சனி பகவானின் அருளைப் பெற நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமானவை அவரை சாந்தப்படுத்துவதாகும்.

பாடாய் படுத்தும் ஏழரை நாட்டு சனி! தப்பிக்க வேண்டிய செய்ய வேண்டியவை..! | Ezharai Nattu Sani PariharamRepresentative Image

சனிப்பெயர்ச்சி

சனி பகவான் மிக மெதுவாக நகரக்கூடிய கிரகம் ஆகும். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் சனி பகவான் தங்கி, 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டு காலம் எடுத்துக் கொள்வார். நீதி பகவானாகச் செயல்பட்டு, மக்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன்களை அளிப்பார். அந்த வகையில், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி நடக்கிறது. இதில் சனி பகவான் அசுப நிலையில் இருந்தால், மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு சில ராசிக்காரர்கள் பரிகாரங்களை மேற்கொள்வது அவசியம் ஆகும். இது சனி பகவானின் வக்ர பார்வையில் இருந்து அவர்களுக்கு நிவர்த்தி அளிக்கும்.

பாடாய் படுத்தும் ஏழரை நாட்டு சனி! தப்பிக்க வேண்டிய செய்ய வேண்டியவை..! | Ezharai Nattu Sani PariharamRepresentative Image

ஏழரை நாட்டுச் சனி பாதிப்பு

சனியின் தீய பார்வை வாழ்க்கையை அளிப்பதுடன், ராசிக்காரர்கள் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளைச் சந்திப்பர். இதனால், அவர்களுக்கு பல்வேறு மோசமான விளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உடல் நலம், நிதி சார்ந்த பாதிப்புகள் மட்டும் இல்லாமல், உறவுகள், மரியாதை, நற்பெயர் போன்றவற்றிலும் மோசமான விளைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஏழரை நாட்டு சனி மற்றும் சனி திசை என்றாலே மக்கள் மனதில் பயம் உண்டாகிறது.

பாடாய் படுத்தும் ஏழரை நாட்டு சனி! தப்பிக்க வேண்டிய செய்ய வேண்டியவை..! | Ezharai Nattu Sani PariharamRepresentative Image

சனி பகவான் பரிகாரம்

சனி பகவானின் அருளைப் பெறவும், அவரின் தாக்குதலைக் கட்டுப்படுத்த அவரை சாந்தப்படுத்தவும் சனி மகாதசையின் போது ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளைத் தவிர்ப்பதற்கும், சில பரிகாரங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

✤ ஏழை எளிய மக்களுக்கு உங்களால் முடிந்த தானம் செய்யலாம். அதாவது உணவு, உடைகள், காலணிகள், செருப்புகள் போன்றவற்றைத் தானம் செய்தால், சனி பகவானை மகிழ்ச்சி அடையச் செய்கிறது. அது மட்டுமல்லாமல், கருப்பு எள், கருப்பு வஸ்திரம் போன்றவற்றைத் தானம் செய்வதும் நல்லது.

✤ சனி தோஷம் நீங்குவதற்கு, உளுந்து, கருப்பு எள், இரும்பு போன்றவற்றைக் கருப்பு துணியில் நனைத்து எண்ணெயில் தோய்த்து, பின் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இது சனி பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட நிவாரணம் தரும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்