நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு, செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். மனதில் ஏற்படும் தாழ்வு மனப்பானை நீங்கும். மனதில் நினைத்ததை செய்து முடிக்கும் தன்னம்பிக்கை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கேளிக்கை சம்மந்தமான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எந்த சூழ்நிலையையும் சந்திக்கும் மனப்பக்குவம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும்.
நிலுவையில் இருந்து வந்த தனவரவு கிடைக்கும். முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத செலவுகள் மூலம் விரயங்கள் உண்டாகும். சுபகாரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கும். வாகன பயணங்களில் அதிக கவனம் வேண்டும். பணவரவில் இருந்த இழுவைகள் நீங்கும். வீட்டில் இருப்பவர்களின் தேவைகளை அறிந்து அதனை நிறைவேற்றுவீர்கள். கணவன்-மனைவி இடையே தேவையற்ற விவாதத்தை குறைப்பது நல்லது. வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பழைய நினைவுகளால் மன வருத்தங்கள் வந்து நீங்கும். நீண்ட நாட்களாக உடலில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைக்கு எதிர்பார்த்த தீர்வு கிடைக்கும்.
கடன் பிரச்சனைகள் தீரும். வீடு,மனை வாங்கும் முயற்சியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணியில் இருந்து வந்த சுமைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். வேலை மாற்றத்திற்காக பல நாட்களாக காத்திருந்தாள் அது நிறைவேறும். மற்றவர்களை சாராமல் முடிவு எடுப்பது நல்லது. வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த இழுபறிக்கு நீங்கும். எந்த தொழில் செய்தால் அதில் பெரிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையாட்களிடம் பொறுமையுடன் நடந்துகொள்ளவும்.
பயிர்களுக்கு சரியான உரம்,மருந்தினை பயன்படுத்துவன் மூலம் லாபம் அதிகரிக்கும். குறுகிய காலம் பயிர்களை விளைச்சல் செய்வதால் கவனம் வேண்டும். சமூகம் தொடர்பான பணிகளில் சுறுசுறுப்புடன் பங்கேற்பீர்கள். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். ஏதும் செய்ய முடியும் என்னும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவும் போது சூழ்நிலைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் குலதெய்வத்தை வணங்குவதன் மூலம் செயல்பாடுகளில் இருக்கும் தடை தாமதங்கள் நீங்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…