நவக்கிரகங்களில் நிழல் கிரகங்கள், பாவ கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்றெல்லாம் சொல்லப்படும் ராகு - கேதுவுக்கு என்று தனி வீடுகள் இல்லை. இந்த கிரகங்கள் எந்த வீட்டில் இருக்கின்றனவோ அந்த வீட்டின் அதிபதியாக கருதப்படுவர். 'கரும்பாம்பு' எனும் 'ராகு' போக காரகன் ஆவார். 'செம்பாம்பு' எனும் 'கேது' மோட்ச காரகன் ஆவார். இந்த இரண்டு கிரகங்களும் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சாரம் செய்து சுப மற்றும் அசுப பலன்களை கொடுப்பார்கள். அந்தவகையில், 2023 - 2025 க்கான ராகு-கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களை போல் அல்லாமல் வக்கிர நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள் என்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கு எந்தமாதிரியான பலன்களை கொடுக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக தடைகள் குறையும். பொருள் வரவு, மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பிறமொழி பேசும் பிரபலமானவர்கள், உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். பிடித்த வீடு, வாகனத்தை மாற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தெளிவான தீர்வினை தெரிந்துகொள்வீர்கள். தேவையற்ற சிந்தனைகளை அகற்றி தன்னம்பிக்கையுடன் செயல் படுங்கள். சகோதரர்களிடத்தில் அனுசரித்து நடப்பது நல்லது. பாகப்பிரிவினை விவகாரத்தில் பொறுமையாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தேவையற்ற இடங்களில் மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. சிறு தூர பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிர்பாராத சில தனவரவுகள் மூலம் மேன்மை உண்டாகும்.
பொருளாதாரத்தில் இருந்து வந்த இழுபறியான சூழ்நிலைகள் குறையும். ஆடம்பர எண்ணங்களை குறைப்பது நல்லது. தாயாரின் உடல்நிலையில் இருந்த பிரச்சனைகள் குறையும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல் பட வேண்டும். காது சம்மந்தமான பிரச்சனைகள் வந்து நீங்கும். தந்தை வழியில் விரயங்கள் உண்டாகும். கர்பிணி பெண்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கவனம் தேவை. மனதில் இருந்த சஞ்சலங்கள் குறையும். உறவினர்களின் வழியில் மதிப்பு அதிகரிக்கும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள்.
மாணவர்கள் கல்வியில் இருந்த சோம்பல்கள் குறைந்து சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். உயர்கல்வியில் நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும். வெளியூர்களில் வேலை செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். நியாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் ஏற்படும். சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். கணினி தொடர்பான பணியில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மருத்துவம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும்.
கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விளைச்சலில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் உண்டாகும். கடின முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கும். தம்பதியர்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் நாகதேவதைகளை வழிபாடு செய்தால் வரப்போகும் தடைகள் நீங்கி சாதகமான சூழல் ஏற்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…