தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
அதாவது, வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் 12 ராசிக்காரர்கள் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
ராசி அதிபதியான செவ்வாய் பகவான் தன ஸ்தானத்தில் வலுப்பெற்று இருப்பதால், தடை, தாமதம், சண்டை, சச்சரவுகள் அனைத்தும் விலகும். அதேபோல், பண விஷயங்களில் இருந்து வந்த இழுபறி, நஷ்டம், கடன் அனைத்தும் நீங்கும். தந்தையின் மூலமாக அனுகூலப் பலன்களை பெறுவீர்கள். உங்க ராசிக்கு 10 ஆம் இடத்தில் சூரியன், சுக்ரன், சனி மூன்று கிரகங்களும் ஒரே இடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் படிக்க..
வாழ்க்கையை எதார்த்தமாகவும் மகிழ்ச்சியாகவும் எடுத்துக்கொள்ளும் ரிஷப ராசியினரே. ராசி அதிபதியான சுக்கிர பகவான் வரும் தை 8 ஆம் தேதிக்கு பிறகு உங்க ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருந்து 10 வது இடத்துக்கு சஞ்சாரம் ஆவதால், அற்புதமான பலன்களை கொடுக்கப் போகிறது. உங்களை அறியாமலேயே தெய்வீக ஈடுபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையின் அன்பு, ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் படிக்க..
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதற்கு ஏற்ப மிதுன ராசிக்காரர்களுக்கு தை மாதத்தில் அமைந்திருக்கும் கிரக நிலையால் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். கடந்த இரண்டரை வருடமாக அஷ்டம சனியால் மிகப்பெரிய சவால் நிறைந்த காலக்கட்டமாக இருந்திருந்திருக்கும். கடன் பிரச்சனையால் அடிமேல் அடி வாங்கி சிக்கி தவித்திருப்பீர்கள். ஆனால், இந்த மாதத்தில் இருந்து இதுவரை பட்ட அனைத்து கஷ்டங்களுக்கும் திருப்புமுணை ஏற்படப்போகிறது. மேலும் படிக்க..
ஒரு கஷ்டத்தில் இருந்து இன்னொரு கஷ்டத்திற்கு போகறோம் என்ற பயத்திலேயே இந்த தை மாதம் ஆரம்பமாகிறது. ஏனென்றால், கண்டக சனியில் இருந்து தப்பித்த கடக ராசியினர் வருகின்ற ஜனவரி 17 ஆம் தேதி அஷ்டமத்து சனியில் நுழைய போகிறீர்கள். கண்டக சனிக்காலத்தில் உடல் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்திருப்பீர்கள். இந்த மாதத்தில் அனைத்து உடல் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கப்போகிறது. மேலும் படிக்க..
வரும் தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதமாக அமைகிறது. அரசு சார்ந்த வேலைகள், அரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக அமையும். எந்த பிரச்சனையும் இல்லாமல், நீங்கள் செய்யும் எல்லா விஷயங்களும் நன்மைகளிலேயே முடியக் கூடிய மாதமாகும். உங்கள் எதிராளிகளே உங்களிடம் சரணடையும் காலமாக அமையும்.புதிதாக வீடு, நிலம் வாங்கக்கூடிய யோகங்கள், புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கக் கூடிய யோகங்கள் என அனைத்தும் நிறைவேறும். மேலும் படிக்க..
வேலை மாற்றம், குடும்ப வறுமை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்து வந்த கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகப் பெரிய இராஜ யோகத்தை அள்ளித் தரக் கூடிய மாதமாக அமைகிறது. கல்வியில் பின் தங்கிய நபர்களுக்கு நினைவாற்றல் அதிகரிப்பதுடன், கல்வியில் சிறந்து விளங்குவர். தெளிவான சிந்தனையுடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அடுத்த மூன்று வருட கால கட்டத்தில் சிறப்பான யோகங்கள் பெற போகும் காலமாக அமைகிறது. மேலும் படிக்க..
கடந்த கால கட்டங்களில் கடனால் சிக்கித் தவித்த துலாம் ராசிக்காரர்களுக்கு, இந்த தை மாதம் பண வருவாயைத் தரக்கூடிய மாதமாக அமையும். உடல்ரீதியான பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் என தொடர்ந்து வெவ்வேறு விதமாக பிரச்சனைகளைச் சந்தித்த துலாம் ராசிக்காரர்கள், இந்த மாதம் சுப காரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு. கடன்கள் அனைத்தும் நிவர்த்தியடைவதுடன், வருமானமும் ஈட்டுவதற்கான சிறப்பான காலமாக அமையும். மேலும் படிக்க..
வாழ்க்கையில் அடுத்தடுத்து துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து தினமும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பார்கள் விருச்சக ராசிக்காரர்கள். ஏழரை சனி காலகட்டம் முடிந்த பின்பும் கடந்த ஐந்து ஆறு வருடமாக பொருளாதார வீழ்ச்சி, கடன் பிரச்சனை, மன நிம்மதி இல்லாமல், தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் என்று அனைத்து பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தை மாதமானது உங்களுக்கு சாதகமானதாக அமையும். குரு பகவான் மற்றும் செவ்வாய் உங்கள் ராசிக்கு நற்பலன்களை தருவார்கள். மேலும் படிக்க..
இதுவரை ஏழரை சனியால் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் தனுஷ் ராசிக்காரர்களுக்கு இந்த தை மாதம் முதல் நற்பலன்கள் அமையும் காலமாக இருக்கிறது. வரும் ஜனவரி 17 ஆம் தேதி அன்று தனுஷ் ராசியில் இருந்து சனி பகவான் முழுமையாக பெயர்ச்சி பெரும் காலம் என்பதால் இனி உங்களுக்கு வளர்ச்சிக்கான காலம் ஆரம்பித்துவிட்டது. மேலும் இடமாற்றத்தால் யோகம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் படிக்க..
இந்த தை மாதமானது மகரம் ராசிக்காரர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் இருக்கும் காலமாக அமைந்துள்ளது. வரும் ஜனவரி 17 ஆம் தேதி அன்று சனி பகவான் பெயர்ச்சியாவதால் வளர்ச்சிக்கான காலம் ஆரம்பிக்கிறது. ஜென்ம சனியால் உங்களுக்கு நேர்ந்த கஷ்ட நஷ்டங்கள் எல்லாம் விலகும். மகரம் ராசிக்கு 2 ஆம் இடத்தில பாத திசை என்பதால் பிரச்சனைகள் குறையும். மேலும் படிக்க..
தை மாத கிரக நிலையின் படி, வரும் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி அன்று சனிபகவான் கும்பம் ராசியை தொட இருக்கிறார். ஆக ஜென்ம சனி தொடங்கும் கால கட்டமும் இது தான். நீண்ட சோதனைகளுக்கு பின்னர் இப்போது தான் எல்லாம் கை கூடி வந்துகொண்டிருக்கிறது அதற்குள் ஜென்ம சனி தொடங்குகிறதா என்று கவலை பட வேண்டாம். ஏனெனில் எந்த தீங்கும் இழைக்காதவர்களுக்கு சனி பகவான் எந்த கெடுதலும் செய்ய மாட்டார். மேலும் படிக்க..
வரும் தை மாதம் மீனம் ராசிக்காரர்களுக்கு எல்லா நன்மைகளும் கை கூடி வரும் காலமாக அமையும். ஏனெனில், குரு பகவான் உங்க ராசிக்கு 5 ஆம் இடமான பூர்வ புண்ய புத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றி பெறும். அதே போல், வரன் எதுவும் அமையவில்லை என்று துவண்டு போயிருக்கும் மீனம் ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும். மேலும் படிக்க..
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…