தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
அதாவது, வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் சிம்ம ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
வரும் தை மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான மாதமாக அமைகிறது. அரசு சார்ந்த வேலைகள், அரசு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக அமையும். எந்த பிரச்சனையும் இல்லாமல், நீங்கள் செய்யும் எல்லா விஷயங்களும் நன்மைகளிலேயே முடியக் கூடிய மாதமாகும். உங்கள் எதிராளிகளே உங்களிடம் சரணடையும் காலமாக அமையும்.புதிதாக வீடு, நிலம் வாங்கக்கூடிய யோகங்கள், புதிதாக வண்டி, வாகனங்கள் வாங்கக் கூடிய யோகங்கள் என அனைத்தும் நிறைவேறும்.
இதுவரைக்கும் நீங்க எதிர்பார்த்தது எல்லாம் இந்த மாதத்தில் நடக்கப் போகும் மாதமாக அமையக்கூடும். உடல் ரீதியாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். இந்த தை மாதத்தில் நீங்கள் செய்து கொண்டிருந்த வேலைகளை விரிவுபடுத்தியோ, அல்லது புதிய தொழில் தொடங்கக் கூடிய காலமோ ஏற்படக் கூடிய மாதமாக அமைகிறது. தங்கம், அணிகலன்கள் வாங்கக் கூடிய மாதமாகும். உத்தியோக உயர்வும் திடீர் பணவருவாயும் கிடைக்கக் கூடும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் யோகங்கள் தரும் காலம். குடும்பத்தில் வருமானம் பன்மடங்கு பெருகக் கூடிய நாள். வீடு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான மாதமாக அமையும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. வெளிநாடுகள் தொடர்புகள் மூலம் வருமான கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. அரசியல் ரீதியான வேலையில், உங்களுக்கு சிறப்பான யோகம் உண்டு. ஐயப்பன் வழிபாடு, காலபைரவர் வழிபாடு, பிரம்மன் வழிபாடு சிறப்பைத் தரும். திருமணம் ஆகாத நபர்களுக்கும் திருமணம் ஆகக் கூடிய மாதம்.
பரிகாரம்
மன நிம்மதியும், மகிழ்ச்சியும் பெறுவதற்கு ஐயப்பன் வழிபாடு, பிரம்மன் வழிபாடு, காலபைரவர் வழிபாடு சிறப்பைத் தரும். இது வளர்ச்சிக்கான காலகட்டத்தைத் தரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…