தை மாதத்தில் மேஷம் ராசியில் ராகு பகவான், 2 ஆம் இடமான ரிஷபத்தில் செவ்வாய் பகவான், 6 ஆம் இடமான கன்னியில் சந்திர பகவான், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது பகவான், 9 ஆம் இடமான தனுசில் புதன் பகவான், மகர ராசியில் சூரிய பகவான், கும்ப ராசியில் சுக்ரபகவான் மற்றும் சனி பகவான், கடைசி இடமான மீனத்தில் குருபகவான் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த மாதத்தில் முக்கிய கிரக பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி நிகழவிருக்கிறது.
அதாவது, வருகின்ற தை மாதம் 3 ஆம் தேதி [ஜனவரி மாதம் 17] சனி பகவான் மகர வீட்டில் இருந்து கும்பத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், தை 8 ஆம் தேதி சுக்ர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், தை 24 ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். சனி, சுக்கிரன், புதன் என மூன்று கிரகங்களின் பெயர்ச்சியாவதால் தை மாதத்தில் விருச்சிக ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
வாழ்க்கையில் அடுத்தடுத்து துன்பங்களையும் துயரங்களையும் சந்தித்து தினமும் வாழ்க்கையில் போராடிக் கொண்டிருப்பார்கள் விருச்சக ராசிக்காரர்கள். ஏழரை சனி காலகட்டம் முடிந்த பின்பும் கடந்த ஐந்து ஆறு வருடமாக பொருளாதார வீழ்ச்சி, கடன் பிரச்சனை, மன நிம்மதி இல்லாமல், தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் என்று அனைத்து பிரச்சனைகளும் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தை மாதமானது உங்களுக்கு சாதகமானதாக அமையும். குரு பகவான் மற்றும் செவ்வாய் உங்கள் ராசிக்கு நற்பலன்களை தருவார்கள்.
எனவே, தை மாதத்தில் இருந்து உங்களுக்கு வளர்ச்சி படி படியாக இருக்கும். மேலும் நீங்கள் புது வீடு குடிபோவது அல்லது மனை, வீடு வாங்குவது உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு சாதகமாக அமையும். மார்கழி 28 அன்று செவ்வாய் பகவான் வக்குற நிவர்த்தி அடைந்துவிட்டதால் திருமணம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். ஜனவரி 17 ஆம் தேதிக்கு பின்னர் விருச்சக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறுகிறது. இதனால் நமக்கு என்ன பிரச்சனை என்று கேட்டால்? சனி பெயர்ச்சியாகி உங்க ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு யோகம் தான்.
குரு பகவானின் பார்வையால் அரசு வேலை கிடைக்கும் என்று காத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். அதே போல் விவசாயம் சார்ந்து இருப்பவர்களுக்கு விசேஷத்தை அளிக்கும். பொருளாதார வளர்ச்சி கிட்டுவதால் கடன் தொல்லையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவீர்கள். தந்தை வழியில் முதலீடு கிடைக்க வாய்ப்புள்ளது. விவாகரத்து ஆகியிருக்கும் விருச்சக ராசிக்காரர்களுக்கு இரண்டாம் திருமணத்திற்கான யோகம் அமையும்.
பரிகாரம்: முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் வாங்கி கொடுங்கள் இருள் நீங்கி வாழ்க்கை ஜொலிக்கும். தை மாதத்தில் வரும் 5 செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் சொல்லுங்கள் வரப்போகும் வினையும் ஓடிவிடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…