உள்நாட்டில் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக மின்சார கார்களை உருவாக்க டெஸ்லா இன்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை அமைக்க முன்மொழிந்துள்ளது என்று கார் தயாரிப்பாளர் புதன்கிழமை அரசாங்க அதிகாரிகளிடம் அறிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க டெஸ்லாவின் மூத்த நிர்வாகிகள் இந்த வாரம் இந்திய அரசாங்கத்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. எலக்ட்ரிக் கார்கள் மீதான இறக்குமதி வரி அதிகமாக இருந்ததால் கடந்த ஒரு வருடமாக இந்த யோசனையை நிறுத்தி வைத்ததாக தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கூறினார். மேலும் இத்திட்டத்தை உறுதி செய்வதால் "மேக் இன் இந்தியா" எலக்ட்ரிக் கார்களை உருவாக்கி சீனாவை விட உற்பத்தியில் முன்னணியில் இருக்க இது ஒரு நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர். இது குறித்து மற்ற விவரங்கள் எதுவும் வெளியாக வில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…