Bank Strikes in June Month: 2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
வேலை நிறுத்தம்
“தி யுனைடெட் ஃபாரம் ஆஃப் வங்கி யூனியன்” க்குக் குடை அமைப்பாக விளங்கும் ஒன்பது வங்கி தொழிற்சங்கங்கள் வரும் ஜூலை மாதம் 27 ஆம் நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
காரணம்
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்குக் காரணத்தைப் பற்றிக் காணலாம். வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து, சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அதன் படி, அனைத்து ஓய்வூதியக்காரர்களுக்கும் ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல் மற்றும் திருத்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் மற்றும் மறுசீரமைப்பு போன்ற கோரிக்கைகள் அடங்கும்.
மேலும், இதனையடுத்து பொதுத்துறை வங்கி ஊழியர்களும் வாரத்தில் ஐந்து நாள்கள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள்
இது குறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC) பொது செயலாளர் சௌமியா தத்தா குறிப்பிடுகையில் “தொழிற்சங்கங்கள் அறிவித்த கோரிக்கைகளுக்கு அரசும் வங்கி நிர்வாகவும் அக்கறை இல்லாமல் இருந்தால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்” என்று கூறியுள்ளார்.
அதன் படி, வரும் 27 ஆம் தேதியன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…