சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.40,920-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ. 5,115-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் அதிகரித்து 40,920 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 50 ரூபாய் அதிகரித்து 5,517 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 44,136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2.20 விலை உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒருகிலோ வெள்ளியின் விலை ரூ.74,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது நகை வாங்க காத்திருந்த நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது முதலீட்டாளர்களை தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரிக்கத் தூண்டியுள்ளது. மேலும் நேற்று ஜப்பானின் மத்திய வங்கி நீண்ட காலத்திற்கு பிறகு வட்டி விகிதத்தை உயர்த்தியதும், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கம் விலை உயர காரணமாக அமைந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…