ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. ஆனால், இன்று தங்கம் விலையைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் ஏற்றமடைந்துள்ளதால் நகை பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை, இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது.
ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.39,208 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 14 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.9 அதிகரித்து ரூ.4,892 லிருந்து 4,901 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.78 அதிகரித்து 39,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,294-லிருந்து 5,303 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு ரூ.42,352-லிருந்து 42,424 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.20 பைசா ஏற்றமடைந்து ரூ.67.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.67,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…