ஏற்ற இறக்கத்துடன் கூடிய தங்கத்தின் விலை, இன்றும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.
கடந்த சில நாள்களாகவே, தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்திலேயே இருந்து வருகிறது. அதன் படி, இந்த வார தொடக்கத்தில் இறக்கத்திலேயே வந்த தங்கத்தின் விலை, கடந்த மூன்று நாள்களாகவே அதிகரித்து வருகிறது. இது நகை வாங்குபவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தின் விலை, கடந்த மூன்று கடும் ஏற்றத்தையே நோக்கிக் கொண்டு வருகிறது.
ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.39,480 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தினத்தில் அதாவது நவம்பர் 25 ஆம் நாளின் நிலவரப்படி, ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு கிராமிற்கு ரூ.4 அதிகரித்து 4,935 ரூபாயாகவும், ஒரு சவரனுக்கு ரூ.32 அதிகரித்து 39,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தூய தங்கம் (24 காரட்) ஒரு கிராமிற்கு 5,384 ரூபாய்க்கும் ஒரு சவரனுக்கு ரூ.43,072 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது அதன் படி, ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.68.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.68,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…