திருமண பந்தத்தில் இருக்கும் தம்பதியினருக்கு, திருமணப் பதிவு என்பது கட்டாயமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தம்பதியினர் எப்படி திருமணச் சான்றிதழைப் பெறலாம் என்பது குறித்து காண்போம்.
2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ், திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி, விசா பெறுவது, பாஸ்போர்ட் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்கு திருமணப் பதிவுச் சான்றிதழ் கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, திருமணம் ஆன தம்பதிகள் கட்டாயம் திருமணத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். இருப்பினும், முன்னதாகவே திருமணப் பதிவிற்கு, ஒவ்வொரு மதத்திற்கும் ஏற்ற சட்டங்கள் இருக்கின்றன. இதனுடனேயே, சிறப்புத் திருமணச் சட்டமும் இருக்கிறது. இந்த சட்டங்களை அடிப்படையாகக் கொண்டே, திருமணத்திற்கான பதிவு நடைபெறும்.
தமிழ்நாடு அரசு, திருமணம் ஆன, தம்பதியர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைனிலேயே திருமணப் பதிவுக்கான வழிமுறை ஏற்பாடு செய்துள்ளது.
✤ முதலில், திருமணச் சான்றிதழ் பெறுவதற்கு அரசின் அங்கீகரிக்கப்பட்ட தளத்திற்குச் சென்று “பதிவு செய்தல்” என்ற ஆப்ஷனைக் க்ளிக் செய்ய வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட முகவரி: https://tnreginet.gov.in/portal/
✤ பிறகு, அதில் பயனர் பதிவு அதாவது, அக்கவுண்டை உருவாக்க வேண்டும். அதில், பயனர் பெயர் மற்றும் அக்கவுண்ட் திறப்பதற்கான முக்கிய விவரங்கள், திருமணத் தம்பதிகளின் தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிட வேண்டும். அதில், பயன்பாட்டில் உள்ள தொலைபேசி எண்ணை உள்ளிட்டு ஓடிபியை பதிவிட்டு அக்கவுண்டை உருவாக்கலாம்.
✤ இவ்வாறு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போதே, அதில் கேட்கப்படும் ஆவணங்களை மணமக்களின் புகைப்படங்களுடன் சேர்த்து இணைத்துக் கொள்ள வேண்டும்.
✤ இவ்வாறு விண்ணப்பித்த பிறகு, நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு, சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து குறுஞ்செய்தி ஒன்று பெறப்படும்.
✤ அதில், திருமணத்தைப் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வர வேண்டும் நேரம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
✤ இந்த குறிப்பிடப்பட்ட தேதியில், திருமணத்தின் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
✤ அதன் பின், ஒரிஜினல் ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று பதிவிடலாம். இவ்வாறு சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லும் போது, சாட்சி கையொப்பத்திற்கு மூன்று நபர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்ட முறைகளின் மூலம், திருமணத்தைப் பதிவு செய்து திருமணச் சான்றிதழைப் பெறலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…