அடுத்த ஆண்டு, உலகம் மிகப்பெரிய பொருளாதார மந்தத்தை சந்திக்கும் என சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, கொரோனா நோய் தொற்று காரணமாக, உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. உலக நாடுகள் அனைத்துமே இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையே போர் தாக்குதல் நடைபெற்றது.
இந்த காரணங்களால்,பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என எச்சரித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி 6% ஆக இருந்த நிலையில் தற்போது 3.2% ஆக குறையும் எனவும், அடுத்த ஆண்டு 2.7% குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதே போல, உலகின் 5 ஆவது மிகப்பெரிய பொருளாதார நாடாகத் திகழும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 8.7 ஆக இருந்தது. இது நடப்பாண்டில் குறைந்து 6.8% ஆக இருக்கும் எனவும், அடுத்த ஆண்டு 6.1% ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 7.4% பொருளாதார வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. தற்போது 6.8% ஆக குறைந்துள்ளது. இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்ததை விட குறைந்ததே இதற்கான காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…