முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 1000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
சமீப காலமாக, முன்னணி ஐடி உட்பட பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலை காரணமாக பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிக அளவிலான அதாவது 1000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பொருளாதார ரீதியாக பெரும் அளவில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கூகுள், மைக்ரோசாஃப்ட், டெஸ்லா, ஆப்பிள், ஃபேஸ்புக், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களை கடந்த 6 மாத காலமாக படிப்படியாக பணி நீக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தற்போது இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையில் இயங்கி வரக் கூடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம், சுமார் 1000-ற்கும் அதிகமான ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள், XBOX, EDGE குறிப்பிட்ட பல அணிகளில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, விண்டோஸ் லைசன்ஸ் உள்ள கணினி விற்பனையும் பெருமளவில் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அவர்களின் ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…