பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 171 நாள்களாகவே எந்த மாற்றமுமின்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய் விலை மற்றும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதன் படி, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் இந்திய ரூபாயின் மதிப்பில் நிர்ணயம் செய்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாகவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் உள்ளது.
இந்த நிலையில், நேற்று வரை தொடர்ந்து 171 ஆவது நாளாக, இன்றும் பெட்ரோல் டீசல் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன் படி, சென்னையில் பெட்ரோல் விலை 102.63 ரூபாயிலிருந்து, 23 காசுகள் உயர்ந்த ரூ.102.86 ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் படி, ஒரு லிட்டர் டீசல் விலை சென்னையில் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 22 காசுகள் உயர்ந்து, ரூ.94.46க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 171 ஆக நாள்களாக, பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் ஏற்படாத நிலையில், இன்று அதிகரித்தது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…