தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து ரேஷன் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.
இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக இருந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதனால், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் இந்த பிரச்சனை எதிரொலித்தது. மேலும், இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பாஜக கடுமையாக குற்றம் சாட்டியிருந்தது.
இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து முதலமைச்சர் அவ்வப்போது அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். அதன்படி, இந்த முறை எந்த பரிசு பொருள் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் தர முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை ஏற்பட்ட பிரச்சனைகளை தவிர்க்கவே முதலமைச்சர் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…