Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

Nandhinipriya Ganeshan Updated:
தொடர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..Representative Image.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல், வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலிலேயே நீடித்ததால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இருப்பினும், குளிர் வாட்டி எடுக்கும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்ச வெப்பநிலையே 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. இதனால், சென்னை ஊட்டியாகவே மாறிவிட்டது. 

சென்னையில் மழை பெய்யாவிட்டாலும் வட தமிழக மாவட்டமான ராணிப்பேட்டையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால்,  பாதுகாப்பு கருதி இன்று அம்மாவட்டத்திற்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்