தமிழகத்தில் மத்திய அரசால், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மைய/ மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 2022-23 ஆம் கல்வியாண்டில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.
அதன் படி, அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர்கள், தேசிய கல்வி உதவித் தொகையின் கீழ் மத்திய அரசு வழங்கும் உதவித் தொகையினைப் பெறலாம். இது முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன் படி, நீடிக்கப்பட்ட கால அவகாசம் இன்றே முடிவடைகிறது. எனவே, விண்ணப்பதாரர்கள் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://scholarships.gov.in/
இன்று அதாவது அக்டோபர் 30, 2022 ஆம் நாள் கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் விண்ணப்பிக்காத மாணவ, மாணவிகள், இத்திட்டத்தில் சேர்ந்து உதவித் தொகை பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், இது குறித்த மேலும் சில தகவல்களைப் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…