Education : உலகம் முழுவதும் கடந்த சில 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தது. மேலும் பொது தேர்வுகளும் தேர்வு முடிவுகளும் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்ட 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் மீண்டும் துவங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
அதன்படி, 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதி திறக்கப்படும் எனவும் பிளஸ் 2 மாணவர்களுக்கும் 20 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 10 நாட்களில் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கொரோனா, குரங்கம்மை, தக்காளி காய்ச்சல், இன்னும் பல காய்ச்சல்கள் பரவி வருவதால், மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…