Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

“பாப்கட் செங்கமலம்” குளித்து மகிழ ரூ.10 லட்சத்தில் நீச்சல் குளம்; அறநிலையத்துறை அசத்தல்! 

Kanimozhi Updated:
“பாப்கட் செங்கமலம்” குளித்து மகிழ ரூ.10 லட்சத்தில் நீச்சல் குளம்; அறநிலையத்துறை அசத்தல்! Representative Image.

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் யானை “பாப்கட் செங்கமலம்” குளித்து மகிழ இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நீச்சல் குளம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. 


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபால சுவாமி கோவிலில் செங்கமலம் என்ற பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. 34 வயதாகும் இந்த யானைக்கு வேறு எந்த யானைக்கும் இல்லாத அளவிற்கு முன் நெற்றி வரை அழகான முடியுள்ளதால் இதனை பக்தர்கள் செல்லமாக “பாப்கட் செங்கமலம்” என அழைத்து வருகின்றனர். அதனையும் யானை பாகன் அழகாக வெட்டி விடுவது  பார்ப்பதற்கு செங்கமலத்திற்கு பாப் கட் போலவே இருக்கும். 

யானையின் அழகான சிகை அலங்காரத்தை பார்க்க கோவிலில் கூட்டம் அதிக அளவில் குவிவது வழக்கம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அதன் ரசிகர்களாயினர். செங்கமலம் யானை கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் பாகன் ராஜகோபால் அவர்களின் வழிகாட்டுதலின் படி கோயிலை வலம் வரும்.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செல்லப் பிள்ளையாக வலம் வரும் பாப்கட் செங்கமலம் யானை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் குளிக்க வசதியாக கோயில் நிர்வாகம், ஏற்கனவே ரூ.75,000 செலவில் ஷவர் வசதியை செய்து கொடுத்துள்ளது.

 இந்நிலையில், செங்கமலம் யானைக்கு கோயில் வளாகத்தில் நீச்சல் குளம் ஒன்று கட்டித்தரவேண்டும் என மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா கோரிக்கை வைத்திருந்தார். அதைத்தொடர்ந்து செங்கமலம் யானைக்கு நீச்சல் குளம் கட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், கோயில் வளாகத்தில் ஈசானிய மூலையில் சுமார் ஆறரை அடி ஆழத்தில் 500 சதுர அடி பரப்பளவில் ரூ.10 லட்சம் மதிப்பில் செங்கமலம் யானை குளித்து மகிழ புதிதாக நீச்சல் குளம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து,அதனை இன்று மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். அந்த நீச்சல் குளத்தில் யானை பாப் கட்டிங் செங்கமலம் குளித்து நீராடி மகிழ்ந்தது.

#மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோயில் வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள நீச்சல்குளத்தினை ( பாப்கட் செங்கமலம்) மன்னை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முனைவர் @TRBRajaa அவர்கள் திறந்து வைத்தார் உடன் நகரக் கழக செயலாளர் மாமா வீரா.கணேசன் அவர்கள்.. pic.twitter.com/oMwmZ72RrO

— A.G_Indrajith (@AGIndrjith) December 5, 2022

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்