கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் காங்கேயம் சாலை பணிமனையில் இயங்கி வரும் 4 அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. என்ன காரணமாக இருக்கும் என மனதில் இதுகுறித்து எழும்பும் சந்தேகத்திற்கு இந்த பதிவு உதவியாக இருக்கும்.
காங்கேயம் சாலை பணிமனையில் இருந்து இயங்கி வரும் பேருந்துகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு அளித்திருந்தது.
இதுவரை இழப்பீடு தொகை வழங்காமல் போக்குவரத்து துறை மறுப்பு தெரிவிப்பதாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் விபத்தில் சம்பந்தப்பட்ட 4 பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது. இந்த 4 பேருந்துகளும் ஏலம் விட்டு இழப்பீடு தொகையை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…