கோவையில் 10 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக, இரண்டு காமுகர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
27 வயதான ராஜ் என்ற அதிர்ஷ்டராஜ் கோவையில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தாலும், அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில், அதிர்ஷ்டராஜ் தனது பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி, யாரும் இல்லாத நேரத்தில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், இது குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். சிறுமியை மிரட்டி இந்த கொடூரத்தை அதிர்ஷ்டராஜை தொடர்ந்து வந்த நிலையில், விஷயம் அவனது நண்பன் வெள்ளைக்காரன் என்ற சுரேஷ்பாபுவிற்கு தெரிய வந்துள்ளது.
தவறு செய்த நண்பனை நல்வழிப்படுத்தாமல் அவனோடு கூட்டு சேர்ந்து இருவரும் சிறுமியை மிரட்டி சீரழித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று, சிறுமி அதிர்ஷ்டராஜ் வீட்டில் இருந்து அழுதபடியே வெளியே வந்ததால், அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சிறுமியிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளனர்.
அப்போது சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அதிர்ஷ்டராஜ் மற்றும் சுரேஷ் பாபு ஆகிய 2 பேரையும் பிடித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…