Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,437.01
493.33sensex(0.68%)
நிஃப்டி22,313.45
165.55sensex(0.75%)
USD
81.57
Exclusive

எங்களை தேட வேண்டாம்.. மாயமான சிறுமிகள்.. திண்டுக்கலில் அதிர்ச்சி!!

Sekar October 23, 2022 & 14:03 [IST]
எங்களை தேட வேண்டாம்.. மாயமான சிறுமிகள்.. திண்டுக்கலில் அதிர்ச்சி!!Representative Image.

திண்டுக்கலில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் 2 பேர் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த 2 சிறுமிகள் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஒன்றாக 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். மேலும் இவர்கள் இருவரும் டியூசனுக்கும் ஒன்றாக சென்று வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இவர்கள் வழக்கம்போல டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிய பின்னர், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் டியூஷன் சொல்லிக்கொடுக்கும் இடத்திற்கு சென்று பார்க்க அங்கு இருவரும் இல்லை. 

இதற்கிடையே அவர்கள் இருவரும் தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த புத்தாடைகளை தங்களுடன் எடுத்துச் சென்றதோடு, ஒரு மாணவி வீட்டில் கடிதம் ஒன்றை வைத்துவிட்டுச் சென்றதும் தெரியவந்தது. 

அந்த கடிதத்தில், "என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேட வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளிக்க, மாயமான இரு சிறுமிகளையும் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்