சேலம் மாவட்டத்தில் காதலித்து வந்த இருவர் அவர்களது திருமணத்திற்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே உள்ள செம்மண் காடுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவர் விசைத்தறி தொழில் செய்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கோபி சிறுமியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
டவ், டிரஸ்மீ ஷாம்புகளை பயன்படுத்துவோர் கவனத்திற்கு.. புற்றுநோய் ஆபத்து..
இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமியின் பெற்றோர் சிறுமிக்கு 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்கப் போவதாகக் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல், சிறுமியை பள்ளிக்கு அனுப்புவதையும் அவர்கள் நிறுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு, அந்த சிறுமியும், கோபியும் தென்னை மரத்துக்கு வைக்கக்கூடிய அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளைச் சாப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை இருவருமே உயிரிழந்தனர். இது குறித்து அந்தப் பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…