சென்னையில் இளைஞர் ஒருவர் மின் கம்பி பிடித்தவாறே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வந்தார். இவருக்கு மது பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் நேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம் போல மாடிக்குத் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்த போது மின் வயரை பிடித்தவாறு உயிரிழந்ததைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…