Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

கொலையில் முடிந்த கோவில் பாட்டு போடுதல் தகராறு…! வெட்டி வீசப்பட்ட இளைஞரின் உடல்…!

Gowthami Subramani November 15, 2022 & 16:05 [IST]
கொலையில் முடிந்த கோவில் பாட்டு போடுதல் தகராறு…! வெட்டி வீசப்பட்ட இளைஞரின் உடல்…!Representative Image.

திருமங்கலம் பகுதியில், ஜாமினில் வெளியே வந்த இளைஞரை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் பகுதிக்கு அருகே டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா என்பவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சந்தன பாண்டியன் என்பவருக்கும் இடையே, கோவில் திருவிழாவில் பாடல் போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாரதி ராஜா போலீசாரிடம் புகார் அளித்து, திடீரென தலைமறைவானார். இவரைப் போலீசார் தேடி வந்த நிலையில் வழக்கறிஞர் மூலம் ஜாமின் பெற்றுள்ளார்.

பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய இவர், டீக்கடை ஒன்றில் நண்பர் சரவணக் குமார் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், பாரதிராஜாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில், தடுக்க வந்த சரவணக் குமாரையும் வெட்டி அந்த இடத்திலிருந்து தப்பித்துச் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே பாரதிராஜா உயிரிழந்தார். இதில் காயமடைந்த சரவணக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, சந்தனபாண்டியன் என்பவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்