சென்னை டிஜிபி அலுவலகம் அருகே நடிகை ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சித்ததை அருகிலிருந்தவர்கள் பார்த்து பதைபதைப்புக்கு ஆளானார்கள்.
சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி என்கிற பைரவி. இவர் கடந்த மார்ச் 25ம் தேதி போலீஸ் ஸ்டேசனில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேலூர் பகுதியைச் சேர்ந்த ராஜா தேசிங்கு என்கிற சுப்பிரமணி என்னிடம் பேசினார். தன்னை தயாரிப்பாளர் எனக் கூறிக்கொண்டு என்னிடம் அறிமுகமானார். என்னையும் தயாரிப்பாளர் ஆக்குகிறேன் எனக் கூறி ஆசைக் காட்டினார். பின்னர் மயிலாடுதுறைக்கு சினிமா தயாரிப்பு தொடர்பாக என்னை அழைத்துச் சென்றவர், அங்குள்ள கோயிலில் வைத்து கட்டாயப்படுத்தி தாலி கட்டினார். இப்போது அவர் என்னை பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆனால் 1 மாதம் ஆகியும் இந்த புகார் மீது நடவடிக்கை இல்லை எனக் கூறி நேற்று மாலை டிஜிபி அலுவலகம் செல்ல முயன்றுள்ளார் பைரவி. அங்கு செல்லமுடியாத ஆத்திரத்தில் அதன் வாசல் அருகே நின்று கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். எதிர்பாராத விதமாக ஒரு பெண் தீக்குளிக்க முயற்சித்தால் அருகிலுள்ள பொதுமக்கள் பதறினர். உடனடியாக அருகாமையிலுள்ள காவலர்கள் விரைந்து வந்து அவரை தீக்குளிக்க விடாமல் காப்பாற்றினர். தண்ணீர் ஊற்றி மீட்டனர். மெரினா காவல் நிலைய உதவி ஆய்வாளர் சீனிவாசன் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…