கலவரத்தால் மூடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஜூலை 17ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து பள்ளி வாகனங்கள் தீவைத்து கொழுத்தப்பட்டதோடு, பொருட்களும் சூறையாடப்பட்டன.
இந்த கலவரம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதனை பரிசீலித்த நீதிமன்றம் இன்று முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை போலீஸ் பாதுகாப்புடன் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது.
ஆனால் பள்ளியில் உள்ள 3 தளத்திற்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் பள்லியை திறக்க உத்தரவிட்டதை அடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார், கோட்டாட்சியர் பவித்ரா, முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி ஆகியோர் பார்வையிட்டனர். இதனையடுத்து பள்ளியின் 3வது கட்டடத்திற்கு மட்டும் சீல் வைக்க பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, பிற வகுப்பறைகள் திறக்கப்பட்டுள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…