வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட அரவக்குறிச்சி தாசில்தார் இன்று லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி தாலுக்கா சின்னதாராபுரம் பகுதியில் வசிப்பவர் பழனிசாமி. அவரது தந்தை இறந்த நிலையில், வாரிசு சான்றிதழ் பெற அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், வாரிசு சான்றிதழ் பெற அவரிடம் விசாரணையில் ஈடுபட்ட தாசில்தார் ராஜசேகரன், வாரிசு சான்றிதழ் தர வேண்டுமானால் ரூ.10,000 லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பழனிசாமி, கரூர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் இது குறித்து புகார் அளித்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில் பழனிச்சாமி ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு போய், இன்று தாசில்தார் ராஜசேகரனிடம் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராஜசேகரனை கையும் களவுமாக கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…