சென்னையில் தவறான சிகிச்சையால் குழந்தை இறந்து பிறந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி ஸ்ரேயா பானு (22) ஒன்பது மாத கர்ப்பிணியாவார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அவருக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்ததாக குற்றம்சாட்டி, உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
எனினும் இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கூறுகையில், ஸ்ரேயா பானுவுக்கு ஏற்கனவே ரத்த அழுத்த பிரச்னை உள்ளது என்றும், அவர் கருவுற்றது முதல், தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறினர்.
நேற்று முன்தினம் தான், அவர் இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறிய மருத்துவர்கள், உடனே ஸ்கேன் எடுத்து பார்த்ததில், குழந்தைக்கு இதயத் துடிப்பு இல்லாமல் இருந்தது தெரிய வந்ததாகவும், இதை குடும்பத்திடம் தெரிவித்துவிட்டு, பிரசவ வலிக்கான மருந்துகள் அளிக்கப்பட்டு, இறந்த நிலையில் ஆண் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது என்று மேலும் கூறினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…