Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த கரடி - கிராம மக்கள் அச்சம்!

Editorial Desk Updated:
இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த கரடி - கிராம மக்கள் அச்சம்! Representative Image.

ஊட்டி அருகே இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த கரடியால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். 

 

ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக கரடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. தேயிலை தோட்டத்திற்குள் சுற்றி வந்த கரடி ஒன்று, நேற்று இரவு போர்த்தி கிராமத்தில் உள்ள  வீடு ஒன்றினுள் புகுந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டும், டார்ச் லைட்டுகளை அடித்தும் கரடியை விரட்ட முயன்றுள்ளனர். மனிதர்களின் கூச்சலைக் கேட்ட கரடியும் அருகே இருந்த தேயிலை தோட்டத்திற்குள் ஓடி மறைந்துள்ளது. இதுவரை தேயிலை தோட்டங்களில் சுற்றித் திரிந்த கரடி, தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் உலவ ஆரம்பித்துள்ளது போர்த்தி கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனவே வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து உடனடியாக பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்