பவானிசாகர் அணையில் இன்று காலை 6 மணி நிலவரபட்டி அணை நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேட்டூர் அணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்படும் நிலையில், காவிரி ஆற்றங்கரையில் உள்ள பவானி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காவிரியின் துணை நதிகளில் ஒன்றான பவானி ஆற்றிலும் அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுகிறது. பவானி சாகர் அணையில் நீர் மட்டம் 102 அடியாக உயர்ந்துள்ளதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானி சாகர் அணை நிலவரம்
அணையின் நீர் மட்டம் : 102 அடி
நீர் இருப்பு : 30.31 டிஎம்சி.
நீர் வரத்து : வினாடிக்கு 12,200 கன அடி.
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு : 5 கன அடி நீர்.
பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் நீர் : 12,500 கனஅடி.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…