வேலூர்: காட்பாடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சின்னகீசா குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (57). இவர் மேல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை குத்தகை நிலத்தில் தான் பயிரிட்ட வேர்க்கடலை செடிகளுக்கு களைக்கொல்லி மருந்தினை தெளிக்க சென்றுள்ளார். அப்பொழுது வேர்க்கடலை செடிகளுக்கு நீர் பாய்ச்ச மோட்டாரின் ஸ்வீட்சை ஆன் செய்யும் போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ராணிப்பேட்டை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ராமமூர்த்தியை கொண்டு சென்றுள்ளனர் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராமமூர்த்தி ஏற்கனவே உயர்ந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து மேல்பாடி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…