Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,928.53
102.93sensex(0.15%)
நிஃப்டி20,997.10
27.70sensex(0.13%)
USD
81.57
Exclusive

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை.. குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு!!

Sekar October 13, 2022 & 17:41 [IST]
காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி கொலை.. குற்றவாளியை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு!!Representative Image.

கல்லூரி மாணவியை ரயிலிலிருந்து தள்ளி கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சத்யா, கல்லூரிக்கு செல்வதற்காக, இன்று மதியம் 12.00 மணிக்கு பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த சதீஷ் என்பவன் பின் தொடர்ந்துள்ளான். 

மேலும், பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில், சத்யா காதலிக்க முடியாது என உறுதியாக கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் கல்லூரி மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட, அங்கு வந்த லோக்கல் ட்ரெயின் மாணவி மீது ஏறியது. இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலைக்கு காரணமான சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்