Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,653.73
357.59sensex(0.52%)
நிஃப்டி20,937.70
82.60sensex(0.40%)
USD
81.57
Exclusive

தமிழ் படிக்க முடியல.. தீக்குளித்து தற்கொலை செய்த மாணவி!!

Sekar Updated:
தமிழ் படிக்க முடியல.. தீக்குளித்து தற்கொலை செய்த மாணவி!!Representative Image.

சென்னை அருகே தமிழ் படிக்க இயலாத விரக்தியில் இருந்த கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள கோவில் பாதகை பகுதியை சேர்ந்த பூபதி என்பவரின் மூத்த மகள் தீபா, அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் படித்து வந்துள்ளார். அவர் கடந்த ஒருவாரமாக கல்லூரிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் படித்த நிலையில், கல்லூரியில் தமிழ் துறையை தேர்வு செய்ததால் சரிவர படிக்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்