சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை அண்ணா நகர் பகுதியில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது வீட்டில் இன்று காலை சமையல் அறையில் டீ போடும்போது எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் வெடித்து, சுவர்கள் இடிந்து விழுந்து பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் விபத்தில் 10 மாத கைக்குழந்தை உட்பட 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…