வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் முதல் நாளைவரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05:30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் காரைக்காலுக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 530 கிலோ மீட்டர் தொலைவிலும் மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே 620 கிலோ தொலைவிலும் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ம் தேதி நள்ளிரவில் கரையை கடக்க வாய்ப்புள்ளது. தற்போது புயலின் வேகம் 10 கிலோ மீட்டரில் இருந்து 6 கிலோ மீட்டராக குறைந்துள்ளது.
புயல் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெயக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நாகை, மயிலாடுஹுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் முதல் நாளைவரை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாண்டஸ் புயலின் காரணமாகவும், அதிகமான மழை இருக்கும் காரணத்தால் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…