Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழப்பு… தஞ்சையில் நடந்த பகீர் சம்பவம்..!

Gowthami Subramani October 18, 2022 & 16:00 [IST]
கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழப்பு… தஞ்சையில் நடந்த பகீர் சம்பவம்..!Representative Image.

தஞ்சை மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் நடுக்காவேரியைப் பகுதியைச் சேர்ந்த கமலநாதன், ஜெயலட்சுமி தம்பதியினர் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தஞ்சை மேம்பாலத்தில் சென்ற போது, பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து, இவர்களது பைக்கை முந்தி செல்ல முயன்றது. இதில், பைக்கின் பக்கவாட்டில் உரசியுள்ளது.

இதனால், நிலை தடுமாறிய பைக்கில் இருந்து கீழே விழுந்த ஜெயலட்சுமி மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் தனது கணவன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்