ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் நள்ளிரவில் திடீரென பற்றி எரிந்த குப்பைகளால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. என்னதான் அங்கு நடந்தது எப்படி திடீரென தீ? இது பற்றி அறிய இந்த பதிவை மேற்கொண்டு படிக்கவும்.
நள்ளிரவில் பற்றி எரிந்த தீ
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட தூரபாளையம் மற்றும் ஒரத்திமேடு பகுதியில் பேரூராட்சி குப்பைகளை கொட்டுவது வழக்கம். இங்கு குப்பைகளைக் கொட்டுவதால் மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்துள்ளனர்.
திடீரென எரிந்த தீ அறிந்த மொடக்குறிச்சி தீயணைப்பு துறை, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீ அணைத்தனர். ஆனால், எரிந்த குப்பைகள் இருந்து வெளிவரும் துர்நாற்றம் மற்றும் புகையால் மக்களுக்கு மூச்சு விட கடினமாகியது. புகை மண்டலமாக காட்சியளிக்கும் இந்த இடத்தில் மேற்கொண்டு பேரூராட்சி குப்பைகளை கொட்ட வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…