நிலக்கோட்டை அருகே பச்சிளம் குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்த வழக்கில் காவல்துறையின் விசாரணையில் பகீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த துர்கா தேவி கருத்துவேறுபாடு காரணமாக கணவனைப் பிரிந்து ஒன்றைரை வயது குழந்தை ரத்திகாவுடன் தனியே வசித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 26ம் தேதி தனது தாய் மாமனின் தோட்டத்திற்கு குழந்தையுடன் சென்று தங்கியுள்ளார். அப்போது கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, விசாரணையைத் தொடங்கிய போலீசார் துர்காதேவியின் செல்போன் சிக்கனலை ஆய்வு செய்துள்ளனர். அப்போது துர்கா தேவி, நிலக்கோட்டை அடுத்த தோப்புபட்டியைச் சேர்ந்த அஜய் என்கிற இளைஞர் உடன் தகாத உறவில் இருந்து வந்தது தெரியவந்தது. சம்பவத்தன்று குழந்தையை கிணற்றிற்கு அருகே விளையாட விட்டுவிட்டு, துர்கா தேவி காதலுடனுன் தனிமையில் இருந்ததும், அப்போது குழந்தை தடுமாறி கிணற்றிற்குள் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் தாய் துர்காதேவி மற்றும் அவரது காதலன் அஜய்யை கைது செய்த நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தாயின் தகாத செயலால் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…